Powered By Blogger

Wednesday, August 31, 2011

வீடுகளுக்கு `ஏ.சி.’ தேவையில்லை


வீடுகளுக்கு இனி ஏ.சி. வசதி செய்ய வேண்டாம். வெயிலுக்கும், குளிருக்கும் ஏற்ப வீட்டை இதமாக வைத்திருக்கும் கூரைத் தளஓடுகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
அமெரிக்க ஆய்வாளர்கள் தளஓடுகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளனர். பெரிய ஓட்டல்கள், ரெஸ்டாரன்டுகளில் வீணாகும் எண்ணெய் கழிவுகளைப் பயன்படுத்தி புதிய தளஓடுகள் தயாரிக்கப்பட்டன. அவை வெயில் காலத்தில் சூரிய ஒளியை எதிரொளித்து வீட்டுக்குள் குளிர்ச்சியை பரப்புகிறது. அதேபோல் குளிர் நடுங்க வைக்கும் காலங்களில் குளிரை கிரகித்துக் கொண்டு வீட்டுக்குள் வெதுவெதுப்பான சூழலை பரப்புகிறது.
இதனால் வீடு எப்போதும் வசந்த மாளிகையாகவே இருக்கும். “இந்த கூரை ஓடுகள் அமைக்கப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் வாழ்வில்புதுமையை உணர்வார்கள். வீட்டுக்குள் நிலவும் இதமான சூழல் அவர்களுக்கு `எனர்ஜி டானிக்`காக இருக்கும்” என்கிறார்கள் நவீன கூரை ஓடு வடிவமைப்பாளர்கள்.

No comments:

Post a Comment